ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் ஸ்ரீமன்நாராயணன் மூர்த்தியாக எழுந்தருளி சோடஷா(16) ஆயுதங்கள் வைத்துக்கொண்டு ஸஹஸ்ர ஜ்வாலையுடன் கூடிய பகவான் ஸ்ரீ சுதர்சனர் என்றும் இவருக்கு ஹோமம் செய்து பூஜை செய்தால் மறைமுகமான எதிரிகள் செய்வினை தோஷங்கள் திருஷ்டி தோஷங்கள் விலகுகிறது. மனதில் உள்ள பயம் நீங்கி வாழ்கையை பொலிவுடன் செயல்பட செய்கிறது. இவர் யாகம் செய்து வழிபடுதலில் மிகவும் சந்தோஷத்தை அடைகிறார். நமது ஆலயத்தில் பக்தர்கள் ப்ரார்த்தனையின் படி ஹோமம் செய்து தரப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமையன்று கூட்டாக பக்தர்கள் சுதர்சன ஹோமத்தில் பங்கு பெறுகிறார்கள்.