ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு(ஸ்ரீநிவாசபெருமாளுக்கு) அவருக்குரிய வேத மந்திரங்களை சொல்லி ஹோமம் செய்து. அந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட கும்பத்தில் அக்னி பகவானை ஸமாரோபணம் செய்து மூலஸ்தான பெருமாளுக்கு பல திரவ்யங்களினால் திருமஞ்சனம் செய்த பிறகு கடைசியில் சந்தனம் திருமஞ்சனத்துடன் நிறுத்திக்கொண்டு யாஹம் பூர்ணாஹுதி செய்து கும்பதீர்த்ததை திருமஞ்சனம் செய்வது ஆகமத்தில் சொல்லப்பட்டது. இதனால் ஸ்ரீ பகவான் சாந்நித்யம் அடைகிறார். மனதில் நினைத்தகாரியங்கள் நல்லவிதமாக பூர்த்தியாகிறது.