ஸ்ரீ பெருமாளுக்கு வாகனமாக ஸ்ரீ கருட பகவான் சேவை செய்து வருகிறார். ஸ்ரீ கஜேந்திரமோஷம் என்ற கதையில் யானையின் காலை முதலை பிடித்துகொண்டது, அப்பொழுது அந்த யானை ஸ்ரீ பெருமாளை வணங்கி அழைத்தது உடனே கருடன் என்ற பரவைமேல் ஏறி உடனே வந்து காப்பாற்றினார் என்பது புராணக்கதை. அதைபோல் பக்தர்களுக்கு வரும் திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ பெருமாளை கருடவாகனத்தில் அமர்ந்தார்போல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்து ஆலயம் வலம் வந்து பிரசாதங்கள் வழங்கப்படுகிறதும் மேலும் பக்தர்கள் ப்ரார்த்தனையின் பேரில் இந்நிகழ்ச்சி சிறப்பாக செய்து தரப்படுகிறது. இதனால் ஸ்ரீ பெருமாளின் அனுக்ரஹமும், ஸ்ரீ கருட பகவானின் அருளும் கிடைக்கிறது.