ஸ்ரீ வரலஷ்மி விரதம் தமிழ் மாதம் ஆவணி பௌர்ணமிக்கு முன்பாகவரும் வெள்ளிகிழமையில் கொண்டாடப்படுகிறது. இது பெண்கள் கொண்டாடும் விரதமாகும்.சுமங்கலிகள் (திருமணம் ஆனவர்கள்) தாலி பாக்கியத்துக்காகவும் சகல செல்வங்கள் செளபாக்கியங்கள் வேண்டி செய்யும் பண்டிகையாகும். இந்த விரத்தை தேவலோகத்தில் கொண்டாடி பூஜை செய்வது சகல செளபாக்கியத்தை அடைந்துள்ளார்கள் பூஜை செய்யும் போது திருமணம் ஆகாதவர்கள் கலந்து கொள்ளலாம். ஸ்ரீ வைணவ ஆலயத்தில் இந்த நாளில் ஸ்ரீ மகாலஷ்மிக்கு பூஜை செய்து பூஜையில் வைத்த மஞ்சள் கயிறு(சரடு) பெண்கள் பெரியவர்கள் குழந்தைகள் கட்டிக்கொள்வது வழக்கம் இந்த விரதத்தை பக்தியோடு செய்பவர்களுக்கு ஸ்ரீ மகாலஷ்மியின் அருள் கிடைக்கும்.