ஆழ்வார்கள் என்பவர் ஸ்ரீ விஷ்ணுவின் பரம பக்தனாக விளங்குபவர்கள் இவர்கள் உலகத்தில் மக்கள் அனைவரும் வேதங்களை சொல்ல இயலாது ஆகையால் வேதத்தின் சாரமாக ஆழ்வார்கள் நான்காயிரம் பாசுரங்களை எழுதி பாடி அனுபவித்தார்கள் இதில் வைணவ கடவுளின் அனைத்து பெருமைகளை கூறுகிறது. அப்பேர்பட்ட பாடல்களை இயற்றிய பக்தர்கள் தான் ஆழ்வார்கள் இவர்கள் இறைவனின் அருளால் முக்தி அடைந்து ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு அம்சமாக வைணவ ஆலயத்தில் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஆழ்வார்களும் பல திவ்ய தேசங்களில் தோன்றி இறைவனை நினைத்து பாடியுள்ளர்கள் ஒவ்வொரு ஆழ்வார்களும் தோன்றிய நட்சத்திரத்தில் நமது ஆலயத்தில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து ஸ்ரீ ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.