செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய தினங்கள் அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நாட்களாகும். ஆகையால் உத்தரயானத்தில் ஆரம்பமாகும் முதல்மாதமான தை மாதத்தில் தானியங்கள் நன்கு விளைவதற்கு அம்பாள் அருளை வேண்டி வைணவ ஆலயங்களில் ஸ்ரீ மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பெண்கள் இந்த தினங்களில் திருவிளக்கு பூஜை செய்து அருள்பெறுவது வழக்கம். நமது ஆலயத்திலும் ஸ்ரீ மகாலட்சுமிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை நடைபெறும்.