இந்த பூஜை தமிழ் மாதம் மார்கழி 30 நாட்களுக்கு நடைபெறுகிறது. சூரியன் உதயத்திற்குள் செய்ய கூடிய பூஜை வடமொழியில் உள்ள சுப்ரபாதம் (பெருமாளை எழுப்பகூடியது போன்றே தமிழில் உள்ள திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் திருப்பாவை படிப்பார்கள் முடிந்த பிறகு திருமாலுக்கு பூஜை செய்து பொங்கல் நிவேதனம் செய்வார்கள். இவ்வாறு 30 நாட்களுக்கு வழிபடுவார்கள் மேலும் மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவு காலம் முடிந்து விடியற்காலையாக அமைகிறது ஆகையால் இறைவனை வழிபடுவதற்கு உள்ள மாதமாக கருதப்படுகிறது. அதிகாலையில் எப்பொழுதும் பக்தர்களுக்கு உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உள்ள தெளிவுக்கும் எப்பொழுதும் சிறந்தது இந்த மாதம் முழுவதும் பகவானை தியானிப்பதும் திருமாலை நினைப்பதும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கின்றது. இந்த பூஜை நமது ஆலயத்தில் கொண்டாடப்படுகிறது.