மார்கழி மாதம் அமாவாசை அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த தினமாக கொண்டாட படுகிறது. இந்த தினத்தில் விசேஷ ஹோமங்கள் விசேஷ அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. நமது ஆலயத்தில் ஒரு மாதம் தினமும் ஹோமம் அபிஷேகம் வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்ய படுகிறது. மேலும் இறைவனுக்கும் பிடித்தமான ஸஹஸ்ரநாம அர்ச்சனையை ஒரு மாதகாலம் லட்ஷார்ச்சனையாக செய்யபடுகிறது. இதனால் விஷேச பலன்கள் பக்தர்களுக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வளர்ச்சி, மறதியின்மை, திருமண தடைகள் முக்கியமாக நவக்ரஹத்தினால் ஏற்படும் கஷ்டங்கள் நிவர்த்தியாகிறது. மேற்கண்ட பூஜைகள் நமது ஆலயத்தில் நடைபெறுகிறது.