ஆவணி மாதம் வளர் பிறை சதுர்த்தி திதி தினத்தை விநாயகர் பிறந்த தினமாக கொண்டாடபடுகிறது. பக்தர்கள் அனைவரும் இந்த தினத்தில் மண் பிள்ளையார் பிடித்த சிலைகளை வாங்கி வழிபட்டு பின்னர் கடலில் கரைத்து விடுகிறார்கள். இதை பல காலமாக வழக்கத்தில் வைத்துள்ளனர். அந்த தினத்தில் அனைத்து ஆலயத்திலும் சிறப்பு ஹோமம், அபிஷேகம், சிறப்பு அர்ச்சனைகள் செய்து பக்தர்கள் ஸ்ரீ விநாயக பெருமானின் அருளை பெறலாம். நமது ஆலயத்தில் பக்தர்கள் சிறப்பாக பங்குபெறும் சிறப்பு மோதக அர்ச்சனையும் உண்டு.