ஸ்ரீ குபேரன் என்பவர் இந்திராதி திக்கபாலகர்களில் ஒருவர். இவர் வடக்கு திசைக்கு அதிபதியாவார். இவர் பகவானுடைய தனத்திற்கு அதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவருக்கே ஒரு சமயம் தனம் தட்டுப்பாட்டின்போது ஸ்ரீ பகவான் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை குறித்து தவம் செய்ய சொல்லி, ஸ்ரீ லக்ஷ்மியின் அருளால் அவருடைய கஷ்டங்கள் விலகியதால் மக்களுக்கு தனம் தான்யங்கள் மற்றும் 16 விதமான செல்வங்களில் குறைவு ஏற்பட்டால் இந்த யாகத்தை செய்தால் நமது பக்திக்கு கட்டுப்பட்டு நாம் செல்வந்தர்களாக ஆகமுடியும். இறைவனுடைய வழிபாட்டில் பக்தியே முக்கியமாக கூறப்படுகிறது அந்த பக்தி மார்கத்தில் தான் தேவர்களுக்கு ப்பிரிதியாக யாகம் செய்து வழிபடுவது அவர்களுக்கு திருப்தியளிக்கிறது. அதன் வகையிலே நமது ஆலயத்தில் ஒவ்வொரு ஆங்கில மாதத்திலும் முதல் வெள்ளிகிழமை நடைபெறுகிறது.